twitter
rss




பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Print E-mail



தை திங்கள் வந்தது தமிழருக்கு பெருமை தந்தது
ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பை
உலகுக்கு உணர்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்
Image Image
உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

கலப்பையினால்தான் அகப்பையில் சோறு என்பதை சொல்ல
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

பல விஞ்ஞானம் வந்தாலும் இந்த விவசாயின் வேர்வைக்கு

தனி மதிப்புள்ளதென்பதை தைரியதுடன் சொல்ல
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
Image
ஆடு மாடுக்கும் மனதுள்ளதென்பதை அறிந்து

மாலை மரியாதை செய்ய
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

கன்னியர்களை கெளரவப்படுதி

கூட்டமாக கூட்டாஞ்சோறு பொங்கிட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

மஞ்சளும் கரும்புடன் மங்களமாய் இனித்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்
Image
இப்படி -தமிழினங்களை தரணியில் உயர்த்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் உழவர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும்
இலுப்பையூர் அரவிந்தனின் மனமார்ந்த
தைதிங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..--








வாழ்க வளமுடன்
D.Aravinthan,
M.Sc physics,
Second year,
Bharathidasan university,
Trichy-620024,
Tamil Nadu.
www.currentaffairsandexam.blogspot.com




0 comments:

Post a Comment