twitter
rss

தை திங்கள் வந்தது தமிழருக்கு பெருமை தந்தது
ஏர்பிடித்து உழுதிடும் உழவரின் உழைப்பை
உலகுக்கு உணர்திட
 வந்தது திங்கள்   தந்திடும் பொங்கல்
 
உழைப்பவரின் மனதினை உற்சாகப்படுத்திட
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

கலப்பையினால்தான் அகப்பையில் சோறு என்பதை சொல்ல
வந்தது திங்கள் தந்திடும் பொங்கல்

பல விஞ்ஞானம் வந்தாலும் இந்த விவசாயின் வேர்வைக்கு

தனி மதிப்புள்ளதென்பதை தைரியதுடன் சொல்ல
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

ஆடு மாடுக்கும் மனதுள்ளதென்பதை அறிந்து

மாலை மரியாதை செய்ய
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

கன்னியர்களை கெளரவப்படுதி

 கூட்டமாக கூட்டாஞ்சோறு பொங்கிட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

மஞ்சளும் கரும்புடன் மங்களமாய் இனித்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

இப்படி -தமிழினங்களை தரணியில் உயர்த்திட
வந்தது திங்கள் தந்தது பொங்கல்

உலகில் உள்ள ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் தமிழினத்துக்கும் உழவர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும்

என் மனமார்ந்த தைதிங்கள் பொங்கல் நல்வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..



pongal.jpg
தைக்கின்ற முள்சொற்கள்
தமைப்பேசாத் தமிழினத்தார்
‘தை’க்கு அன்று அப்பெயரைத்
தந்ததென்ன காரணமோ?
வித்தை விதைப்பவர்க்கு
விளைச்சலையும் அனுபவிக்கும்
வித்தை தெரியவில்லை;
வியர்வையினால் பிறருக்குச்
சொத்தைப் பெருக்கித்தாம்
சொத்தையாய்ப் போவோர்க்கும்
இத்தைதான் கிழிந்திருக்கும்
இதயத்தைக் கொஞ்சம்
தைத்துத் தருவதனால்
தையென்று சொன்னாரோ?
காளைகளின் கொம்புகளைக்
காதலியர் கொங்கைகளாய்க்
காளையர்கள் எண்ணிக்
கைகளால் தழுவுகையில்
தைக்கின்ற புண்ணே
தாம் விரும்பும் குங்குமமாய்
வைக்கின்ற பெண்கள்தாம்
வைத்தாரோ இப்பெயரை
அத்தை மகளும், அவள்
அம்மான் மகனும், இனி
இத்தையில் மணம்புரிய
இனிய வழி பிறக்குமென்று
மெத்தைக் கனவுகள்
மெல்ல நெஞ்சைத் தைப்பதனால்
தத்தைத் தமிழிலிதைத்
தையென்று சொன்னாரோ?
மையலார் கண்ணால்
மணவாளன் இதயத்தைத்
தையலார் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
தையலர்க்கும் ஆடவர்க்கும்
தக்கபடி புத்தாடை
தையலர்கள் தைப்பதனால்
தையென்று சொன்னாரோ?
கைதனில் கரும்பெடுத்துக்
களிக்கின்ற சிறுவர்கள்
தைதையென ஆடுவதால்
தையென்று சொன்னாரோ?
சாதிப் பகையால்
சமயப் பிணக்குகளால்
வீதிக் கலவரத்தால்
வெறிபிடித்த கட்சிகளின்
மோதல்களால் தங்கள்
முகவரியை −ழந்துவரும்
ஆதித் தமிழர்
அனைவரையும் ஒன்றிணைத்து
அன்பாலே தைக்கின்ற
அந்நாளே தையென்போம்
இன்பநாள் காண்போம்
இணைந்து என
இனிய தைத்திருநாளில் வாழ்த்துவது
இலுப்பையூர் அரவிந்தன் .
……
--

 








 ID.ARAVINTHAN WISHES A HAPPY PONGAL
      TO YOU AND YOUR FAMILY.









0 comments:

Post a Comment